districts

img

மறைந்த ஊராட்சிச் செயலாளரின் குடும்பத்தினருக்கு நிவாரண உதவி

மயிலாடுதுறை, டிச.5-  மயிலாடுதுறை மாவட்டம், செம்பனார்கோவில் ஊராட்சி ஒன்றியம், கொத்தங்குடி ஊராட்சியின் செயலராக பணியாற்றி வந்தவர் முகமது ரஃபி. இளையாளூர் வடகரை யை சேர்ந்த இவர், இரவு தூக்கத்தில் இருந்தபோதே நெஞ்சுவலி ஏற்பட்டு பரிதாபமாக உயிரிழந்தார்.  

இதுகுறித்து தகவலறிந்த தமிழ்நாடு ஊராட்சிச் செயலாளர் சங்கத்தினர் “காக்கும் கரங்கள்” திட்டத்தின் கீழ் அச்சங்கத்தின் மாநிலத் தலைவர் ஜான் போஸ்கோ பிரகாஷ், மயிலாடுதுறை மாவட்டத் தலைவர் வி. நாகராஜன், மாவட்டச் செயலாளர் வீரமணி மற்றும் மாநில, மாவட்ட, வட்டார நிர்வாகிகள் மறைந்த கொத்தங்குடி ஊராட்சி செயலாளர் ரஃபி யின் குடும்பத்தினரை நேரில் சந்தித்து 50 ஆயிரம் நிவாரண உதவித்தொகை அளித்து ஆறுதல் கூறினர்.